கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர் அமெரிக்காவின் நிவ்போர்ட் நிறுவனப் பணிப்பாளர் கொழும்புக்கு வந்துள்ளாரெனவும் கூறினார்.
இந்த அரசாங்கம் அமெரிக்க நிறுவனங்களோடு இரகசியத் திட்டங்களை வகுத்து வருவதாகவும் குறிப்பாக மின்சார அபிவிருத்தித் திட்டங்கள் அரச நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்படுவதில்லை என்றும் மின்சாரசபை சேவையாளர் சங்கத்தின் தலைவர் ரஞ்சன் விஜயலால் கூறினார்.
ஆனால் அரசாங்கம் இந்தக் குற்றச்சாட்டுக்கள் குறித்து எதுவுமே கூறவில்லை.
இதேவேளை, கொழும்பின் எல்லை மாவட்டமான கம்பகா மாவட்டத்தில் உள்ள கெரவலப்பிட்டிய பிரதேசத்தின் ஒரு பகுதியை எரிபொருள் உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கு வழங்கப்படுவதற்கு அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளமைக்குக் கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டிருந்தது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அமெரிக்காவுக்குச் சென்றுள்ளவேளையில் ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனக் கட்சி அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகள் கடும் எதிர்ப்பு வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.