பணத்தூய்மைப்படுத்தல் இடம்பெற்றிருக்கக்கூடுமா என்பது தொடர்பாக உடனடியாக விசாரணை நடத்த வேண்டுமென நிதிக்குற்ற விசாரணைப் பிரிவிடமும் ட்ரான்ஸ்பரன்ஸி இன்டர்நெசனல் நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.
1975 ஆம் ஆண்டின் முதலாம் இலக்க சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் பிரகடன சட்டத்திற்கு அமைவாக, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பதவி வகிக்கும் மூத்த அரச அதிகாரிகள் தமது வாழ்க்கைத் துணை மற்றும் அவரைச் சார்ந்துள்ள பிள்ளைகளின் சொத்துக்கள், பொறுப்புக்கள் அனைத்தையும் வெளிப்படுத்த வேண்டும்.
சொத்து மற்றும் பொறுப்புக்களின் வருடாந்த பிரகடனங்களை சமர்ப்பிக்க அரசாங்கம் உரிய ஏற்பாடு செய்ய வேண்டுமென என ட்ரான்ஸ்பரன்ஸி இன்டர்நெசனல் நிறுவனம் கோரியுள்ளது.
நிருபமா ராஜபக்சவின் பெயரில் வைப்பில் உள்ள அனைத்துப் பணங்களும் ராஜபக்ச குடும்பத்துக்குரியதென எதிர்க்கட்சிகள் வெளிப்படையாகக் குற்றம் சுமத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.