பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் கொழும்பு நகரில் குவிக்கப்பட்டிருந்தனர். பொலிஸாரின் தடைகளையும் மீறி ஆர்ப்பாட்டப் பேரணி கொழும்பு நகருக்குள் வந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் கர்சா டி சில்வா தெரிவித்தார்.
ஆனால் பொலிஸார் தடைகளை விதிக்கவில்லையென்றும் சுகாதார விதிகளை மாத்திரமே பொலிஸார் பேணியதாகவும் அமைச்சர் டளஸ் அழகப் பெருமா தெரிவித்தார்.
இதேவேளை, ராஜபக்சக்களின அரசாங்கத்துக்கு எதிரான உணர்வோடுதான் மக்கள் இருக்கிறார்கள். ஆனால் பலமான எதிர்க்கட்சி இல்லையென ஐக்கிய சோசலிச முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது.
எதிர்க்கட்சிகளைத் தாண்டி மக்கள் இயல்பாகவே வீதிக்கு இறங்கும் காலம் வெகு தூரத்தில் இல்லையென இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்தார்.
இந்தப் போராட்டத்தினால் அளவுக்கு அதிமான பொலிஸாரும் இராணுவத்தினரும் விசேட அதிரடிப் படையினரும் கொழும்பு நகர வீதிகளில் குவிக்கப்பட்டிருந்தனர்.