கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் விமானங்களுக்குச் சுத்தமான எரிபொருளை சப்புகஸ்கந்த நிலையம் வழங்கி வந்ததாகவும் 60 சதவீத எரிபொருட்கள் ,அங்குதான் சுத்திகரிக்கப்படுவதாகவும் கூறிய ஆர்ப்பாட்டக்காரர்கள் வெளிநாட்டு நிறுவனத்திற்கு விற்பனை செய்யவுள்ளதாகவும் குற்றம் சுமத்தினர்.
அத்துடன் சுத்திகரிக்கப்பட்ட எரிபொருட்களை இறக்குமதி செய்யும் நோக்கம் அரசாங்கத்துக்கு இருப்பதாகவும் சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் வெளிநாட்டு நிறுவனத்தினால் வேறொரு தேவைக்குப் பயன்படுத்தப்படவுள்ளதென்றும் ஆர்ப்பாட்டக்கார்கள் தெரிவித்தனர்.
மின்சக்தி எரிபொருட்துறை அமைச்சர் உதயகம்பன்வில அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்தினார். ஆர்ப்பாட்டக்கார்கள் கூறுவது உண்மை என்றும், அமைச்சர் ஒருவர் அரச நிறுவனங்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்து கொண்டிருக்கிறாரெனவும் பகிரங்கமாகக் குற்றம் சுமத்தினார்.
இதேவேளை, சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டதால், கடந்த ,இரண்டு நாட்களாகக் கொழும்பு உட்பட பல்வேறு மாவட்டங்களிலும் எரிபொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இன்றும் வாகனங்கள் வரிசையில் காத்திருந்தன.
சமையல் எரிவாயுவுக்கும் கடந்த ,இரண்டு வாரங்களாகத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 50 நாட்களுக்கு மத்திரமே மூடப்பட்டுள்ளதாக அரசாங்கம் கூறியுள்ளது. ஆனால் ஊழியர்கள் அதனை மறுத்துள்ளனர்.