விசாரணைகளில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளன. கத்தோலிக்கத் திருச்சபையின் கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் அரசாங்கத்தின் மீது சந்தேகம் வெளியிட்டுள்ளதாகவும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
தமது அரசாங்கம் பதவியேற்றதும் இந்த விசாரணைகளைத் துரிதப்படுத்தும் எனவும் சஜித் பிரேமதாச மேலும் கூறினார்.
இதேவேளை, கொழும்பு பொரல்லை தேவாலய வளாகத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்ட கைக் குண்டு தொடர்பான விசாரணைகள் உரிய முறையில் நடத்தப்படுமென பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தேவாலயத்தின் சிசிரி கமராக்களில் காணப்பட்ட குறித்த நபர் தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் சிசிரி கமாராக்களில் உள்ள பதிவுகளை உரிய முறையில் பொலிஸார் பரிசோதிக்கவில்லையென பேராயர் மல்கம் ரஞ்சித் தெரிவித்த குற்றச்சாட்டையும் பொலிஸ் திணைக்களம் மறுத்துள்ளது.