காலிமுகத் திடல் போராட்டத்துக்கு வெளியில் நின்று ஆதரவு வழங்குமாறும் கட்சி அரசியலில் ஈடுபடாத பொதுமக்கள் மாத்திரNமு காலிமுகத் திடல் போராட்டத்தில் பங்கெடுக்க முடியுமெனவும் இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, மே தினம் அன்று தமது கட்சி ஆதரவாளர்களை காலிமுகத்திடல் போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அறிவித்திருந்தார்.
இதனையடுத்தே காலிமுகத் திடலில் போராட்டம் நடத்தும் இளைஞர் குழு இந்த அறிவித்தலை விடுத்துள்ளது.
மே தினம் அன்று கொழும்பில் சிங்கள அரசியல் கட்சிகள் அனைத்தும் பேரணிகள், ஊர்வலங்களை நடத்தவுள்ளன. கோட்டாபயா ஜனாதிபதிப் பதிவியில் இருந்து விலவேண்டுமென வலியுறுத்தியே பேரணிகள் நடைபெறுமென கட்சித் தகவல்கள் கூறுகின்றன.