கயந்த கருணாதிலக்க, ஹெக்டர் அப்புஹாமி, சமிந்த விஜேசிறி, ஹேஷh விதானகே, ரோஹினி கவிரத்ன, காவிந்த ஜயவர்தன உள்ளிட்டவர்களே இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை
ஐக்கிய மக்கள் சக்தியினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த மே தின கூட்டத்தில் சரத் பொன்சேகத. ஹரிக் பெர்ணாண்டோ ஆகியோர் வாக்குவாதப்பட்டிருந்தனர். இந்த வாக்குவாதம் தொடர்பாகவே இன்றைய கூட்டத்தில் சர்ச்சை எழுந்தது. சஜித் பிரேமதாச மீதும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.
உறுப்பினர்கள் தர்க்கப்பட்டமையினால் கூட்டம் இடைநடுவில் நிறுத்தப்பட்டதாகவும் ஐக்கிய மக்கள் சக்தித் தகவல்கள் கூறுகின்றன.
இதேவேளை, இன்று இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் கருத்து வெளியிட்ட ஜே.வி.பி தலைவர் அனுரகுமார திஸாநாயக்கா அரசியல் கட்சிகள் மேற்கொண்ட ஊழல் மோசடிகள் குறித்து வெளியிட்டுள்ளார்.
சஜித் பிரேமதாச 2015 ஆம் ஆண்டு மைத்திரி- ரணில் அரசாங்கத்தில் மூன்று பில்லியன் டெலார்களை அபகரித்துள்ளதாகக் கூறியுள்ளார். ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் அனுர குமாரதிஸாநாயக்கா மேலும் தெரிவித்தார்.