பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு விவகாரங்கள்

ரணில் விக்கிரமசிங்கவுக்கு மைத்திரி ஆதரவு

அமைச்சரவையில் இருபதுபேர் மாத்திரமே
பதிப்பு: 2022 மே 15 20:26
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: மே 15 23:14
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
இலங்கைத்தீவின் தற்போதைய நெருக்கடிகளுக்கு மத்தியிலும் பிரதமராகப் பதவியேற்றுள்ள ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவதென, முன்னாள் ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது. ஆதரவு வழங்குவது தொடர்பான கடிதம் ஒன்றை மைத்திரிபால சிறிசேன ரணில் விக்கிரமசிங்கவுக்கு அனுப்பியுள்ளார். ஆதரவு வழங்குவதோடு, அரசாங்கத்தின் பொருளாதார செயற்பாடுகள் அனைத்துக்கும் ஒத்துழைப்பு வழங்கப்படும் என்றும் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
 
ரணில் விக்கிரமசிங்கவுக்குக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கப்போதில்லை என்றும் அரசாங்கத்தில் இணைந்து அமைச்சுப் பதவிகளைப் பெறுவதில்லை என்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முன்னர் அறிவித்திருந்தது.

இந்த நிலையில். ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கவுள்ளதாகக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. ஆகவே அரசாங்கத்தில் இணைந்து அமைச்சுப் பதவிகளையும் பெறக்கூடிய வாய்ப்புள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தகவல்கள் கூறுகின்றன.

புதிய அரசாங்கத்தில் இருபது பேருக்கு மாத்திரமே அமைச்சுப் பதவிகள் வழங்கப்படுமென ஜனாதிபதி செயலகத் தகவல்கள் கூறுகின்றன. இது தொடர்பாக கோட்டாபய ராஜபக்ச, ரணில் விக்கிரமசிங்கவுடன் உரையாடியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.