ரணில் விக்கிரமசிங்கவுக்குக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கப்போதில்லை என்றும் அரசாங்கத்தில் இணைந்து அமைச்சுப் பதவிகளைப் பெறுவதில்லை என்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முன்னர் அறிவித்திருந்தது.
இந்த நிலையில். ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கவுள்ளதாகக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. ஆகவே அரசாங்கத்தில் இணைந்து அமைச்சுப் பதவிகளையும் பெறக்கூடிய வாய்ப்புள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தகவல்கள் கூறுகின்றன.
புதிய அரசாங்கத்தில் இருபது பேருக்கு மாத்திரமே அமைச்சுப் பதவிகள் வழங்கப்படுமென ஜனாதிபதி செயலகத் தகவல்கள் கூறுகின்றன. இது தொடர்பாக கோட்டாபய ராஜபக்ச, ரணில் விக்கிரமசிங்கவுடன் உரையாடியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.