கோட்டை நீதவான் நீதிமன்றில் இது குறித்த வழக்கு விசாரணை புதன்கிழமை நடைபெற்றபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களான பவித்ரா வன்னியாராச்சி, நாமல் ராஜபக்ச சஞ்சீவ எதிரிமான்ன, ரோஹித அபேகுணவர்தன ஆகியோர் தமது கடவுச்சீட்டை நீதிமன்றில் ஒப்படைத்துள்ளதாகவும் மகிந்த ராஜபக்ச, சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், மஹிந்த கஹந்தகம மற்றும் பலர் இதுவரையில் தமது கடவுச்சீட்டை நீதிமன்றில் ஒப்படைக்கவில்லை எனவும் தெரிவித்தனர்.
அதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் ரேணுகா பெரேரா ஆகியோர் தமது கடவுச்சீட்டுகள் அழிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷந்தவின் கடவுச்சீட்டு வேறொரு குற்றச் செயல் தொடர்பான வழக்கு ஒன்றில் ஒப்படைக்கப்பட்டிருப்பதாகவும் பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.