இந்த நிலையில் இன்று காலிமுகத்திடலில் போராட்டம் மேலும் வலுவடைந்துள்ளது. கொழும்பின் புறநகர் பகுதிகளில் இருந்து பேரணியாக வந்த இளைஞர்கள், யுவதிகள் காலிமுகத்திடலில் ஒன்றுகூட முற்பட்டனர்.
ஆனால் பொலிஸார் கொள்பிட்டிச் சந்தியில் தடுத்து நிறுத்தினர். கண்ணீர் புகைக் குண்டுத் தாக்குதல்களும் நடத்தப்பட்டன. இன்று வெள்ளிக்கிழமை கொள்ளுப்பிட்டியிலிருந்து முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ள பேரணிக்கு எதிராக கொழும்பு - கோட்டை நீதிவான் நீதிமன்றம் சனிக்கிழமை தடை உத்தரவு பிறப்பித்திருந்தது.
ஆனால் நீதிமன்றத் தடையுத்தரவையும் மீறிப் பேரணி நடைபெற்றது. பொலிசார் தடுத்தபோதும், இளைஞர்கள் பலர் காலிமுகத்திடலுக்குச் சென்று அங்கு போராடிக் கொண்டிருந்த இளைஞர்களுடன் இணைந்து எதிர்ப்பை வெளியிட்டனர்.
இந்தப் போராட்டத்தினால் வெள்ளிக்கிழமை பிற்பகல் முன்று மணியில் இருந்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.