இந்த விவாதத்தில் பேசிய ஜே.வி.பி உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்கா, மக்களை ஒரு நாளைக்கு இரண்டுவேளை மாத்திரம் சாப்பிடுமாறு கட்டளையிட பிரதருக்கு உரிமை இல்லை என்று கூறினார்.
ஏற்கனவே, கடந்த இரண்டு மாதமாக வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மக்கள் இரண்டுவேளை உணவு மாத்திரமே அருந்துகின்றனர், தேநீர்கூட அருந்துவதில்லை என்றும் அனுரகுமார திஸாநாயக்கா தெரிவித்தார்.
பிரதமரின் உரையை தொழிற்சங்க சம்மேளனம் கண்டித்துள்ளதாக ஜே.வி.பி உறுப்பினர் விஜத கேரத் கொழும்பில் செய்தியாளர்களிடம் கூறினார்.
தமது வீடுகள் எரிக்கப்பட்டமைக்கு நஷ்டஈடு வழங்க வேண்டுமென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் பலரும் செவ்வாயன்று நாடாளுமன்றத்தில் வேண்டுகோள் விடுத்ததைக் கண்டித்த விஜத கேரத், பசி பட்டினியால் மக்கள் கஷ்டப்படும்போதும், எரிக்கப்பட்ட வீடுகளுக்கும் சொத்துக்களுக்கும் நஷ்டஈடு கோருவது வெட்கம் கெட்ட செயல் என்றும் கூறினார்.