இந்த நிலையில் எரிபொருள்களை ஏற்றிவரும் கப்பல் மேலும் தாமதமடைவதால், அடுத்த வாரமும் கொழும்பில் பாடசாலைகள், அரச நிறுவனங்கள் செயற்பட முடியாதென அரசாங்கம் கூறியுள்ளது.
இதேவேளை, எரிபொருள் வழங்கப்படவில்லையானால். அடுத்த வாரம் முதல் பாடசாலைகளுக்குச் செல்வதை நிறுத்தவுள்ளதாக கொழும்பு தவிர்ந்த ஏனைய மாவட்ட ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர்.
அத்துடன் சம்பளத்திற்குச் சமமாகப் போக்குவரத்துச் செலவுகள் அதிகரித்துள்ளதால், சம்பள அதிகரிப்பு அல்லது எரிபொருள் மானியம் வழங்கப்பட வேண்டுமென ஆசிரியர் சங்கங்கள் கூறியுள்ளன.
இதே கோரிக்கையை அரச ஊழியர் சம்மேளனமும் முன்வைத்துள்ளது.