ஆனால் ஆதரரிப்பது தொடர்பாக எந்தவொரு எழுத்து மூலமான உறுதிமொழி எதனையும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பெறவில்லை எனக் கொழும்புத் தமிழ் வட்டாரங்கள் குற்றம் சுமத்தியுள்ளன.
ஆனால் எழுத்துமூல உறுதிமொழி பெறப்பட்டதாக சுமந்திரன் கூறியுள்ளார். இருந்தாலும் அந்த எழுத்து மூல உறுதி மொழியை ஊடகங்களுக்கு வழங்கவில்லை.
ரணில் விக்கிரமசிங்கவுடன் ஏற்பட்ட பகை காரணமாகவே டளஸ் அழகபெருமாவை ஆதரிக்க முடிவெடுத்ததாக கூட்டமைப்புத் தகவல்கள் கூறுகின்றன.
மொட்டுக் கட்சியில் இருந்து பிரிந்து சென்று சுயாதீனமாகச் செயற்பட்டு வரும் விமல் வீரவன்ச, உதயகம்பன்வில போன்ற சிங்களத் தீவிரவாத உறுப்பினர்கள், மீண்டும் மொட்டுக் கட்சியுடன் இணைந்து அதன் வேட்பாளர் டளஸ் அழகபெருமை ஆதரிக்க முடிவு செய்துள்ள நிலையில், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் தீர்மானித்துள்ளது.
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி எவருக்கும் வாக்களிப்பதில்லை என்று அறிவித்தள்ளது. விக்னேஸ்வரன் இதுவரை தனது முடிவை அறிவிக்கவில்லை.
புதன்கிழமை முற்பகல் பத்து மணிக்கு இலங்கை ஒற்றையாட்சி நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடைபெறும்.