இத் தீர்மானத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் அறிவித்துள்ளார். இந்த நிலையிலேயே வெள்ளிக்கிழமை சந்திப்பதென ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.
ஆனால் சர்வகட்சி அரசாங்கத்தில் இணைய முடியாதெனவும், சர்வகட்சிச் செயற்பாடு மாத்திரமே முன்னெடுக்க ஒத்துழைப்பு வழங்கப்படுமெனவும் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் ஹர்சா டி சில்வா செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.
புதன்கிழமை அரசாங்கத்தின் கொள்கை விளக்க உரையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இலங்கை ஒற்றையாட்சி நாடாளுமன்றத்தில் நிகழ்த்தவுள்ளார். அதன் பின்னர் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களை நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் சந்திக்கவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
சர்வகட்சி அரசாங்கம் அமைப்பதற்குத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்குமெனக் கையொப்பமிட்டுக் கடிதம் ஒன்றைச் சம்பந்தன், ரணில் விக்கிரமசிங்கவுக்குச் செவ்வாய்க்கிழமை அனுப்பியுள்ளார.
இந்த நிலையிலேயே புதன்கிழமை நாடாளுமன்றக் கட்டடத்தொகுதியில் சந்திப்பு இடம்பெறவுள்ளதாகக் கொழும்பு அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. ஆனால் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு சந்திப்பை உறுதிப்படுத்தவில்லை.