எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடரில் இலங்கை சம்பந்தமாக வெளியிடப்படவுள்ள அறிக்கை மிகவும் பாரதூரமான ஒன்று.
அந்த அறிக்கை வெளியிடப்படும் முன்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தன்னால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை ரணில் விக்கிரமசிங்க நிறைவேற்றுவார் என்று தான் நம்புவதாகவும் விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
ஜனாதிபதித் தெரிவுக்கான வாக்கெடுப்புக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யுமாறும், வடக்குக் கிழக்கில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் காணி ஆக்கிரமிப்புகளை நிறுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்ததாக அவர் கூறினார்.
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை இரத்துச் செய்யவும் ரணில் விக்கிரமசிங்க இணங்கியதாக விக்னேஸ்வரன் தெரிவித்தார். ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்தபோது அமைச்சர் விஜயதாச ராஜபக்சவும் உடனிருந்தார் என்றும் விக்னேஸ்வரன் கூறினார்.