குறிப்பாக ஒவ்வொரு மாகாணங்களுக்குமான ஆளுநர்களை நியமிக்கும் விடயத்திலேயே இவ்விரு கட்சிகளுக்கும் இடையில் கடுமையான முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாகக் கட்சித் தகவல்கள் கூறுகின்றன.
ஆளுநர்களாக ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த சிலரை நியமிப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கைகளை எடுத்துள்ளார். ஆனாலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் சிலரின் பெயர்களைப் பரிந்துரை செய்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் முன்னாள் அமைச்சர்களான தயா கமகே, ஜோன் அமரதுங்க, நவீன் திஸாநாயக்க ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
ஆனாலும் கடந்த ஆட்சியின்போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் நியமிக்கப்பட்டிருக்கும் ஆளுநர்களை மாற்றவேண்டாமென்று பெரமுன வலியுறுத்தியுள்ளது.
இதனையடுத்தே இரு கட்சிகளுக்கும் இடையில் கடுமையான முரண்பாடுகள் எழுந்துள்ளதாகக் கொழும்புத் தகவல்கள் கூறுகின்றன.