சர்வதேச நாணய நிதியத்துடன் நடத்தப்பட்ட பேச்சுக்கள் தொடர்பாக இதுவரையும் அதிகாரபூர்வமான தகவல்கள் வெளிவரவில்லை. இலங்கை அரசாங்கமும் எதுவும் கூறவில்லை. இந்த நிலையிலேயே நாளை வியாழக்கிழமை அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகின்றது.
ஒருவாரப் பயணம் ஒன்றை மேற்கொண்டு கொழும்புக்கு வந்த சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள், இலங்கையில் தங்கியிருப்பதை மேலும் சில நாட்களினால் நீடித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை அரச அதிகாரிகளுடன் இடம்பெற்று வரும் கலந்துரையாடல்கள் முடிவடையவில்லை என்றும் அதிகாரபூர்வ அறிவிப்புகள் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என்பதாலும், இலங்கையில் மேலும் சில நாட்கள் தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகச் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் கூறுகின்றனர்.
அதிகாரிகள் மட்ட ஒப்பந்தங்களின் கருத்தானது நாணய நிதியத்தின் முகாமைத்துவம், நிறைவேற்றுப் பணிப்பாளர் சபையின் இணக்கமாகவே கருதப்படுவது வழமை.
இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட பின்னரே நிதியுதவிகள் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.