வாக்கெடுப்பில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் இருந்து வெளியேறிய டலஸ் அழகப்பெரும தலைமையிலான 13 பேரடங்கிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகள் பங்கேற்றிருக்கவில்லை.
ஜே.வி.பி எதிராக வாக்களித்தது. தொடர்ந்து வரவு செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நடைபெறவுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ள நிலையில், அரசாங்கம் சமர்ப்பித்த இடைக்கால வரவு செலவுத் திட்டம் நிறைவேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சர்வதேச நாணய நிதியத்துடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தைப் பிரதான எதிர்க்கட்சிகள் மூன்று நாள் விவாதத்தின்போதும் காரசாரமாக விமர்சித்திருந்தன.
ராஜபக்சக்களுக்கு ஆதரவான முறையில் செயற்படும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க என்று குற்றம் சுமத்திய சஜித் அணி உறுப்பினர் ஹர்சா டி சில்வா சர்வதேச நாணய நிதியத்துடன் செய்யப்பட்ட ஒப்பந்தம் இலங்கைக்கு ஆபத்தானது என்றார்.
இரண்டு தசம் ஒன்பது பில்லியன் நிதியுதவி போதாது என்றும், ஏமாற்று வேலை எனவும் கூறிய அவர், இந்த அரசாங்கம் ராஜபக்சக்களின் ஆதரவுடன் இருப்பதாலேயே சர்வதேச நாணய நிதியம் உதவிகளை வழங்கத் தயங்குவதாகவும் ஹர்சா டி சில்வா கூறினார்.