குறிப்பாக ஜெனீவா மனித உரிமைச் சபையில் வெளிப்படையாக எதிர்க்கவுள்ளதாகக் கூறிய அமைச்சர் அலி சப்ரி, இலங்கை தொடர்பான தீர்மானங்களை ஏற்கனவே நிராகரித்துள்ளதாகவும் அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.
இதேவேளை, அமைச்சர் அலி சப்ரி, நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச ஆகியோர் உள்ளிட்ட உயர்மட்டக்குழு ஒன்று ஜெனீவாவுக்கு இன்று திங்கட்கிழமை பயணமாகியுள்ளது.
அரசியல் யாப்பின் 22வது திருத்தம் நிறைவேற்றப்பட்ட பின்னர் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் அதிகாரங்கள் பகிரப்படும் எனவும் அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.
19 ஆவது திருத்தச் சட்டமூலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பெரும்பாலான கட்டமைப்புகள் அரசியலமைப்பின் 22 வது திருத்தத்தில் உள்வாங்கப்படும் எனவும் அமைச்சர் கூறினார்.
19 வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விரும்புவதாகவும் வெளிவிவகார அமைச்சர் கூறினார்.