ஒக்ரோபர் மாத நடுப்பகுதியில் ஏற்படவுள்ள மக்கள் எழுச்சியை எந்தவொரு வர்த்தமானி அறிவித்தலாலும் கட்டுப்படுத்த முடியாதெனவும் ஹிருணிகா பிரேமச்சந்திர செய்தியாளர்களிடம் கூறினார்.
அரசியல் யாப்பு மாற்றத்தை முன்வைத்துக் கடந்த ஏப்ரல் முதல் யூலை மாதம் வரை மக்கள் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அனைத்து மக்களும் ஒன்று சேர்ந்து நடத்திய போராட்டம் போன்று மற்றுமொரு போராட்டத்திற்கு மக்கள் தயாராகியுள்ளதாகவும் கூறினார்.
இலங்கையில் வாழும் ஏழை மக்கள் எதிர்வரும் நாட்களில் எதிர்நோக்கப் போகும் வறுமை மற்றும் பட்டினி நிலைமை காரணமாக போராட்டம் கிளர்ந்து எழும்பும் என்றும் தீர்வை பெற்றுக் கொள்ளாது மக்கள் அமைதியடையப் போவதில்லை எனவும் ஹிருணிகா பிரேமச்சந்திர சவால் விடுத்தார்.