கொழும்பில் உள்ள தனியார் இலத்திரனியல் ஊடகம் ஒன்றுக்கு இரவு வழங்கிய நேர்காணலில், தேர்தல்களைப் பிற்போட்டு ஐக்கிய தேசியக் கட்சியைப் பலப்படுத்துவதே ரணில் விக்கிரமசிங்கவின் நோக்கம் என்று அவர் கூறினார்.
2017 ஆம் ஆண்டு நடத்தப்பட வேண்டிய மாகாண சபைத் தேர்தல்களை அன்று தடுத்து நிறுத்தியவர்தான் ரணில் விக்கிரமசிங்க என்று ஜே.வி.பி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க குற்றம் சுமத்தினார்.
கொழும்பின் புறநகர் பகுதியான பத்தரமுள்ளயில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அனுரகுமார திஸாநாயக்க, தேர்தல்களை விரைவாக நடத்துமாறு போராட்டங்களை நடத்தவுள்ளதாகவும் கூறினார்.
வடக்குக் கிழக்கு எல்லைகளை குடியேற்றம் செய்யப்பட்ட சிங்களக் கிராமங்களுடன் இணைப்பதற்கு வசதியாகவே எல்லை மீள்நிர்ணயக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக ஈபிஆர்எல்எப் செயலாளர் சிவசக்தி ஆனந்தன் குற்றம் சுமத்தியுள்ளார்.