ஆனாலும் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகள் தொடர்பாகச் சந்தேகங்களை எழுப்பியுள்ள ஜே.வி.பி. அரச ஊழியர்கள் தொடர்பான நிபந்தனைகள், பரிந்துரைகள் போன்றவற்றைப் பகிரங்கப்படுத்துமாறு வலியுறுத்தியுள்ளது.
வரவுசெலவுத் திட்ட விவாதத்தின்போது சர்வதேச நாணய நிதியத்துடன் செய்யப்பட்ட ஊழியர் மட்ட ஒப்பந்தம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென ஜே.வி.பி கோரியிருந்தது.
ஆனால் அது ஊழியர் மட்ட ஒப்பந்தம் என்றும் இன்னமும் அரச மட்டத்தில் ஒப்பந்தம் செய்யப்படவில்லை எனவும் அதன் பின்னரே ஒப்பந்தம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் பிரதமர் தினேஸ் குணவர்த்தன நாடாளுமன்றத்தில் கூறியிருந்தார்.
பல இலட்சம் அரச ஊழியர்களைப் பணியில் இருந்து நீக்குதல் அல்லது சம்பளமற்ற விடுமுறை வழங்குதல், அரச நிறுவனங்கள் பலவற்றைத் தனியார் மயப்படுத்தல் போன்றவை சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளில் பிரதானமான பரிந்துரை என்பது குறிப்பிடத்தக்கது.