வரவுசெலவுத் திட்ட விவாதம் நிறைவடைந்த பின்னர் ராஜித சேனரட்ன அரசாங்கத்துடன் இணைவார் என உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.
ஆனால் சுகாதார அமைச்சுப் பொறுப்பை ராஜித சேனரட்ன கேட்பதாகவும், தற்போது சுகாதார அமைச்சராகப் பதவி வகிக்கும் ராஜபக்சவை மையப்படுத்திய ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனக் கட்சி உறுப்பினர் கெகலிய ரம்புக்வெல, அந்தப் பதவியை விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை எனவும் அரசாங்கத் தகவல்கள் கூறுகின்றன.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் சுகாதார அமைச்சர் பதவியைத் தமது கட்சி வைத்திருக்க விரும்புவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் ராஜித சேனாரத்ன அரசாங்கத்துடன் இணைவது மேலும் தாமதமாகி வருவதாகவும், அவர் அரசாங்கத்துடன் இணைந்தால் அவருக்கு வேறு அமைச்சுப் பதவி வழங்குவது தொடர்பாகத் தொடர்ந்தும் கலந்துரையாடப்பட்டு வருவதாகவும் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும் ராஜித சேனரட்ன அரசாங்கத்தில் இணைவது உறுதியென ஐக்கிய தேசியக் கட்சி தொிவித்துள்ளது.