ஆனால் இன்று இடம்பெற்ற நிகழ்வில் அவர் கலந்துகொள்ளவில்லை. மகிந்த ராஜபக்ச சமல் ராஜபக்ச, பசில் ராஜபக்ச, நாமல் ராஜபக்ச உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் பங்குபற்றினர். மகிந்த ராஜபக்ச ரணில் விக்கிரமசிங்கவுக்கு அருகில் இருந்தார்.
நிகழ்வில் ரணில் விக்கிரமசிங்க உரையாற்றினார். பிரதமர் தினேஸ் குணவர்த்தன உள்ளிட்ட சில மூத்த அமைச்சர்களும் பங்குபற்றினர்.
இலங்கை அரசியல் வரலாற்றில் ஏ,டி.ராஜபக்சவின் நினைவேந்தல் நிகழ்வில் ரணில் விக்கிரமசிங்க குறிப்பாக ஐக்கிய தேசியக் கட்சி பங்குபற்றியமை இதுவே முதற்தடவையாகும்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்காவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது என்றும், ஆனாலும் அவர் பங்குபற்றவில்லை எனவும் ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பிட்ட சில பிரமுகர்களுக்கு மாத்திரமே அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனக் கட்சி தெரிவித்துள்ளது.
ரணில் விக்கிரமசிங்க கலந்துகொண்டதால், நடைபெறவுள்ள தேர்தலில் பொதுச் சின்னம் ஒன்றில் ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனக் கட்சி உள்ளிட்ட சில கட்சிகள் கூட்டுச் சேர்ந்து போட்டியிடுமென கொழும்பு உயர்மட்ட அரசியல் வட்டாரங்கள் கருதுவதாகக் கூறப்படுகின்றது.