சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை அரச ஊழியர் மட்டத்தில் செய்யப்பட்ட ஒப்பந்தத்தில் இரண்டு தசம் ஒன்பது பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதென இணக்கம் ஏற்பட்டிருந்தது.
இந்த நிலையில் சர்வதேச நாணய நிதியத்தின் அனுமதி கிடைத்தவுடன், உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி உள்ளிட்ட இலங்கைக்குக் கடன் வழங்கும் தரப்புகளுடன் இணக்கப்பாட்டுக்கு வருவதன் மூலம் மேலும் கடன்களைப் பெற முடியுமெனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
கொள்கையளவில் இணக்கத்தால் ஏற்படும் கடன்கள் மூலம் இலங்கைக்கு எழுநூறு மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைக்குமெனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ஜப்பான் இலகுக் கடன் நிதியுதவி ஒன்றை வழங்கவுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இலங்கைக்குக் ஐம்பத்து இரண்டு பில்லியன் டொலர் கடன் உள்ளது.
அதில் 26 பில்லியன்கள் சீனாவுக்குத் திருப்பிச் செலுத்தப்பட வேண்டியதென அரசாங்கம் கூறுகின்றது. இலங்கைக்கான கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் சீனா இதுவரையும் விட்டுக் கொடுக்கவில்லை என்றே சர்வதேச நாயண நிதியத் தகவல்கள் கூறுகின்றன.
ஆனால் கடன் மறுசீரமைப்புக்குச் சீன இணங்கியுள்ளதாக இலங்கை அரசாங்கம் திங்கட்கிழமை அறிவித்திருந்தது. ஆனால் சீனா இணங்கவில்லை என்றும் எதிர்வரும் மார்ச் மாதம் அளவிலேயே சர்வதேச நாணய நிதியத்துடன் முழுமையான ஒப்பந்தம் செய்யப்படவுள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் கூறுகின்றன