இத் திட்டத்தை இரத்துச் செய்தமை தொடர்பாக விசேட கணக்காய்வின் போது தெரிய வந்துள்ளதாக இலங்கைக் கணக்காய்வாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது.
60,080,000 ஜப்பானிய யென் (ரூ. 10.4 கோடி) முன்கூட்டிய கட்டணமாக திட்டத்திற்குப் பயன்படுத்தப்பட்டுத் திட்டம் முழுமையாக நிறைவு பெற்ற பின்னர் குறித்த தொகையில் ஐம்பது சதவீதம் மீண்டும் கையளிக்கப்படுமென அறிவிக்கப்பட்டிருந்தது.
இலங்கைக் கணக்காய்வாளர் நாயக திணைக்களத்தின் கருத்தின்படி, செப்டம்பர் 24, 2020 அன்று சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்தில் இத் திட்டம் குறித்துப் பேசப்பட்டு அங்கீகரிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இத் திட்டம் தொடர்பாக கடந்த நவம்பர் மாதம் வெளியிடப்பட்ட இலங்கைக் கணக்காய்வாளர் நாயக திணைக்களத்தின் அறிக்கையில் ரத்துச் செய்யப்பட்டமை குறித்த விபரங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது.
கொழும்புத் துறைமுகக் கிழக்கு முனையத்தை அபிவிருத்தி செய்வது தொடர்பான ஒப்பந்தம் 2016 ஆம் ஆண்டு செய்யப்பட்டது. இந்தியா. ஜப்பான் ஆகிய இரு நாடுகளும் இலங்கையின் ஒத்துழைப்புடன் குறித்த அபிவிருத்தித் திட்டத்தைச் செய்வதென ஒப்பந்தத்தில் கூறப்பட்டிருந்தது.
ஆனால் அப்போது ஜனாதிபதியாக இருந்த மைத்திரிபால சிறிசேன ஒப்பந்தத்தைச் செயற்படுத்த அனுமதிக்கவில்லை. 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஜனாதிபதியாகப் பதவியேற்ற கோட்டாபாய ராஜபக்ச குறித்த ஒப்பந்தத்தைச் ரத்துச் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.