அதேவேளை, சர்வதேச நாணய நிதியத்துடன் 2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் கடன் பெறுவதற்கான உடன்படிக்கையைச் செய்ய முடியும் என்று இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க இன்று வியாழக்கிழமை கொழும்பில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபையின் கடன் பெறுவதற்கான அனுமதி கிடைத்தவுடன் இலங்கைப் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த முடியும் என்றும் அமைச்சர் கூறினார்.
ஆனாலும் சர்வதேச நாணய நிதியத்திடம் கோரியுள்ள இரண்டு தசம் ஒன்பது பில்லியன் அமெரிக்க டொலர் நிதி போதுமானதல்ல என்றும் மேலும் நிதியைப் பெறுவதற்குரிய பேச்சுக்களை அரசாங்கம் ஆரம்பிக்கவுள்ளதாகவும் அமைச்சர் ஹௌன் சேமசிங்க கூறியுள்ளார்.