அமெரிக்க நிதியுதவிகள் மூலம் கர்ப்பிணி தாய்மார்களுக்கு பண உதவி வழங்கப்பட்டது என்றும் மிகவும் பாதிக்கப்பட்ட சமூகங்களின் தேவைகளை பூர்த்தி செய்யக்கூடியதாக இருந்ததாகவும் தூதுவர் ஜூலி சுங் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கம் மற்றும் தனியார், சிவில் சமூகம் மற்றும் இலங்கைத்தீவு மக்களுடன் இணைந்து பணியாற்றிய அமெரிக்கா அரசாங்கத்தின் பங்களிப்பை எடுத்துக் காட்டுவதாகவும் ஜூலி சுங் ருவீற்றர் பதவில் மேலும் கூறியுள்ளர்.
அதேவேளை. சர்வதேச நாணய நிதியத்தின் நிதியுதவி இந்த மாதம் கிடைக்கக்கூடிய வாய்புகள் இல்லை என்று ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் ஹர்சா டி சில்வா தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் மக்களுக்குப் பொய் கூறுவதாகவும், மார்ச் மாதம் கூட சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டு தசம் ஒன்பது பில்லியன் நிதி கிடைப்பதற்குரிய வாய்ப்புகள் இல்லை என்றும், இலங்கைக்குக் கடன் வழங்கும் நாடுகள் குறிப்பாகச் சீனா, கடன் மறுசீரமைப்புக்கு முழுமையாக உடன்படவில்லை என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
அதேவேளை, எதிர்வரும் மார்ச் மாதம் முதல் மக்கள் அனைத்துப் பொருட்களையும் பெற்றுக்கொள்ள மீண்டும் வரிசையில் நிற்க நேரிடும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்பன்வில தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்துக்கு எதிரான மக்கள் போராட்டங்கள் மீண்டும் ஆரம்பிக்கும் என்றும் அவா் எச்சரிக்கை விடுத்துள்ளார்.