இச் சந்திப்பையடுத்து இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பாக இந்த மாதம் பத்தாம் பதினொராம் மற்றும் பதின்மூன்றாம் திகதிகளில் தொடர் பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெறவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகள் இந்தப் பேச்சில் பங்குபற்றும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. ஆனால் விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி சந்திப்பில் கலந்துகொள்ளுமா இல்லையா என்று விக்னேஸ்வன் இதுவரை எதுவுமே கூறவில்லை.
அழைப்பு அனைத்துத் தமிழ்த்தேசியக் கட்சிகளுக்கும் விடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இப் பேச்சுவார்த்தையின்போது அமைச்சர்களான, விஜேதாஸ ராஜபக்ச, அலி சப்ரி மற்றும் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து பங்குகொள்வர் என்று அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பை ஏலவே புறக்கணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை உள்ளூராட்சி சபைத் தேர்தல் மார்ச் மாதம் நடைபெறுமென தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. ஜனவரி 18 ஆம் திகதியிலிருந்து 21 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஆனாலும் தேர்தலுக்கான திகதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
இந்த நிலையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.