கொழும்பில் இரண்டு நாட்கள் தங்கியிருக்கும் நிலையில் திருகோணமலை அபிவிருத்தி திட்டம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம், இந்தியாவுடன் மின்சார இணைப்புத் திட்டம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது.
இந்த இரண்டு ஒப்பந்தங்களில் கைச்சாத்திடுவது தொடர்பாக இலங்கை வெளிவிவகார அமைச்சும் கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகமும் அதற்குரிய ஏற்பாடுகளைச் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அமைச்சர் ஜெய்சங்கர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஸ் குணவர்த்தன மற்றும் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் ஆகியோரையும் சந்தித்து உரையாடவுள்ளார்.
அதேவேளை, தமிழ்த்தேசியக் கட்சிகளின் தலைவர்களை அமைச்சர் ஜெய்சங்கர் சந்தத்து உரையாடுவாரா இல்லையா என்பது குறித்து இதுவரை எதுவும் கூறப்படவில்லை.
இதேவேளை, திருகோணமலை அபிவிருத்தி தொடர்பான ஒப்பந்தத்தின் உள்ளடக்கம் பற்றிய விபரங்கள் முழுமையாக ஊடகங்களுக்கு அறிவிக்கப்படவில்லை. மின்சார இணைப்புத் தொடர்பான ஒப்பந்தம் குறித்து இலங்கை மின்சார சபை ஊழியர் சங்கம் சந்தேகம் வெளியிட்டுள்ளது.