உள்ளூராட்சி சபைத் தேர்தல் வேட்புமனுக்கள் தொடர்பான அறிவித்தல் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதற்கேற்ப கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
18 மாவட்டங்களைச் சேர்ந்த 153 உள்ளூராட்சி சபைகளுக்காக அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் மாவட்டத் தேர்தல் செயலகங்கள் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை, உள்ளூராட்சி சபைத் பிற்போடப்படமாட்டாது என்று அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். தேர்தல் நடைபெறும் என்றும் ,தன் மூலம் அரசாங்கம் எதிர்கட்சிகளின் பலத்தை அறிய முடியும் எனவும் அமைச்சர் கூறினார்.
தேர்தலை எதிர்கொள்ள அரசாங்கம் பயப்படவில்லை என்றும் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்தார்.