இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார மூலோபாயத் திட்டத்தின் ஒரு பகுதியாக இலங்கையின் நாடாளுமன்றத்தில் வலுக்கட்டாயமாகவே பதின்மூன்றாவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டதாகவும் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பொலிஸ் காணி அதிகாரங்கள் உள்ளிட்ட சில அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு வழங்கப்படுமாயின் அது இலங்கைத்தீவின் தேசிய பாதுகாப்பு மற்றும் அபிவிருத்திக்கு பாரிய அச்சுறுத்தலாக அமையும் என்றும் தேரர்கள் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கைத்தீவின் வளங்கள் மற்றும் சொத்துக்கள் எதனையும் வெளிநாட்டவர்க்கு விற்பனை செய்வதை உடனடியாக தடுக்கவும். கடந்த காலங்களில் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் ஊழல் மற்றும் வரி ஏய்ப்பு மூலம் இலங்கைத்தீவு இழந்த செல்வம் மற்றும் வளங்களை மீட்டெடுக்க வேண்டும் எனவும் தேரர்கள் தமது கடிதத்தின் வலியுறுத்தியுள்ளனர்.