வழக்கின் முதலாவது பிரதிவாதியான கந்தையா இளங்கோ, 2009 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், முதலாவது பிரதிவாதியால் வழங்கப்பட்டதாகக் கூறப்படும் குற்ற ஒப்புதல் வாக்குமூலம், 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஆறாம் திகதி இடம்பெற்ற விசாரணையின் போது நீதமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளதை பிரதிவாதி தரப்பு சட்டத்தரணி இன்று நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியிருந்தார்.
வாக்குமூலம் நிராகரிக்கப்பட்டு பதின் நான்கு வருடங்கள் விசாரணை எதுவும் நடைபெறாத நிலையில் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டிருந்தமையினால் குறித்த கைதியும் வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டிருந்த ஏனைய மூன்று கைதிகளும் திங்கட்கிழமை பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.