இலங்கைத்தீவில்

தேர்தலை ஒத்திவைக்க வேண்டாம்- பேராயர் பகிரங்க அறிவிப்பு

எதிர்க்கட்சிகளின் போராட்டத்தினால் சபை நடவடிக்கைகள் ஒத்திவைப்பு
பதிப்பு: 2023 பெப். 21 07:59
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: பெப். 25 00:28
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
பொது மக்கள் ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்துக்கு எதிராக வெறுப்படைந்து வருவதால் உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைக்காமல் தேர்தலை நடத்தி மக்களின் விருப்பங்களை அறிய வேண்டுமென இலங்கைக் கத்தோலிக்கத் திருச்சபையின் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் பகிரங்க வேண்டுகோள் விடுத்துள்ளார். கொழும்பு பொரள்ளையில் உள்ள பேராயர் இல்லத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் விளக்கமளித்த கத்தோலிக்க திருச்சபையின் ஊடகப் பேச்சாளர் சிறில் காமினி பெர்னாண்டோ பேராயர் மல்கம் ரஞ்சித்தின் அறிவிப்பை பகிரங்கப்படுத்தினார்.
 
நாளுக்கு நாள் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் உயர்வடைகின்றன. மின்சாரம் தண்ணீர்க் கட்டணங்கள் அதிகரித்துள்ளன. இதனால் மக்கள் பெரும் இன்னல்களை எதிர்நோக்குகின்றனர்.

ஆனால் இது பற்றி அரசாங்கத்துக்கும் அதன் மூத்த அமைச்சர்களுக்கும் தெரிவதில்லை என்று கூறிய சிறில் காமினி பெர்னாண்டோ. தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற பேராயரின் அறிப்பை அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார்.

அதேவேளை, உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைக்காமல் நடத்துமாறு கோரி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டமையினால் சபை நடவடிக்கைகள் புதன்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.