ஆர்ப்பாட்டங்களும் நடைபெறவுள்ளதால் அதனைத் தடுக்கப் பெருமளவு பொலிஸார் வீதிகளில் குவிக்கப்பட்டுள்ளனர். போராட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளதாக இலங்கை மருத்துவர் சங்கமும் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகின்றது.
இதேவேளை, மின்கட்டண உயர்வுக்கு எதிராகக் கொழும்பில் இன்று செவ்வாய்க்கிழமை இரவு தீப்பந்தங்களை ஏந்தியவாறு மக்கள் போராட்டம் ஒன்றில் ஈடுப்பட்டனர்.
கொழும்பு மாளிகாவத்தையில் இப் போராட்டம் நடைபெற்றுள்ளது. கடந்த ஆண்டு ஐநூறு வீதம்வரை மின் கட்டணம் உயர்வடைந்துள்ளதாகவும் அமைச்சர்கள் மற்றும் அரசியல் செல்வாக்குள்ளவர்களின் மின் கட்டண நிலுவை சுமார் ஐநூற்று ஐம்பது மில்லியன் என்றும் ஆனால் அவற்றை அரசாங்கத்தினால் மீளப் பெறமுடியவில்லை எனவும் குற்றம் சுமத்தியுள்ள ஊழியர் சம்மேளனம் சாதாரண மக்களிடம் கட்டணங்களை அதிகரித்து நஷ்டத்தை ஈடு செய்வதாகவும் குற்றம் சுமத்தியுள்ளது.