அதேநேரம் கொழும்புப் பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய பேரணி மீது நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட போதும் ஆர்ப்பாட்டத்திலிருந்து மாணவர்கள் பின்வாங்கவில்லை. பொலிஸாரின் தாக்குதல்களை எதிர்த்துத் தொடர்ந்து போராடினர்.
இதனால் குறித்த ஆர்ப்பாட்ட பேரணி செல்லும் வீதியை மறித்து பெருமளவு அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டனர். இதனால் மாணவர்கள் பொலிஸாருடன் தர்க்கப்பட்டனர். கொழும்பு பல்கலைக்கழகப் பிரதேசத்தில் பதற்றம் நிலவியது. போக்குவரத்தும் தடைப்பட்டன.
கொழும்பு பல்கலைக்கழக வளாகத்திற்குள் செவ்வாய்க்கிழமை கண்ணீர்ப்புகைத் தாக்குதல் வீசப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இன்றைய பேரணி நடத்தப்பட்டதாக மாணவர்கள் தெரிவித்தனர்.
இந்த இரண்டு போராட்டங்களினாலும் கொழும்பு நகரில் புதன்கிழமை முற்பகல் முதல் இரவு பத்து மணிவரையும் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பல தனியார் நிறுவனங்கள், வர்த்தக நிலையங்கள் செயலிழக்கும் நிலையும் ஏற்பட்டது.