இந்த நியமனத்துக்கான அங்கீகாரத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. அதன்படி சரத் வீரசேகர நியமிக்கப்பட்டுள்ளார். தேசிய பாதுகாப்புத் தொடர்பான சட்ட வரைபு ஒன்றைத் தயாரிக்க வேண்டுமென அமைச்சரவையில் பல தடவைகள் பேசப்பட்டது என்றும், அதற்கு அமைவாகவே கூட்டுக் கோரிக்கை முன்வைக்கப்பட்டு இந்த நியமனம் வழங்கப்பட்டதாகவும் ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.
வடக்குக் கிழக்கில் பௌத்த விகாரைகள் கட்டப்படுகின்றமை, இராணுவம் தமிழர்களின் பாரம்பரியக் காணிகளை அபகரிக்கின்றமை போன்ற செயற்பாடுகளை நியாயப்படுத்தி வரும் சரத் வீரசேகர, பௌத்த விவகாரை விஸ்தரிப்புச் செயற்பாடுகளை தேசிய பாதுகாப்பாகக் கருத வேண்டும் எனவும் கூறியிருந்தார்.
இந்த நிலையிலேயே தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.