அமெரிக்கக் கடற்படையின் விசேட படைப்பிரிவு அதிகாரிகள் குழு ஒன்று இலங்கைக் கடற்படைக்கு கடந்த மாதம் திருகோணமலைத் துறைகத்தில் உள்ள இலங்கைக் கடற்படையின் பிரதான முகாமில் பயிற்சியளித்திருந்தது.
அதன் பின்னர் ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் இட்சுனோரி ஒனோடெரா இலங்கைக்கு வந்து திருணோமலைத் துறைமுகம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளைப் பார்வையிட்டிருந்தார்.
அதன் பின்னர் அமெரிக்கக் கடற்படைக்குச் சொந்தமான USS Anchorage என்ற கப்பல் சென்ற வெள்ளிக்கிழமை காலை வருகை தந்திருந்தது.
இந்த நிலையில் ஜப்பான் அரசு, இலங்கை அரசாங்கத்துக்கு நன்கொடையாக இரண்டு அதிவேக ரோந்துப் படகுகளை வழங்கியுள்ளது. அத்துடன் இலங்கை அரசுடன் கடல்சார் பாதுகாப்பு ஒப்பந்தங்களையும் ஜப்பான் செய்யவுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் ஐந்தாம் திகதியும் ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு வருகை தந்திருந்தார்.
இலங்கையில் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்தியா, அமெரிக்கா ஆகிய நாடுகளின் ஆலோசனைப்படி ஜப்பான், இலங்கை மீது கவனம் செலுத்தியுள்ளதாக அவதானிகள் கூறுகின்றனர்.
போருக்கு உதவியளித்திருந்த ஜப்பான் இந்தியா, மற்றும் அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகள் தொடர்ந்தும் இலங்கை அரசாங்கத்துக்கு இராணுவ ஒத்துழைப்புக்களை வழங்கி. தமது அரசியல். பொருளாதார நலன்களுக்கு மேலும் வலுா்ச்சேர்ப்பதாக அவதானிகள் கூநுகின்றனர்.