நாகமுத்து லக்சுமணன், துறைநீலாவணை ஏழாம் வட்டடாரத்தில் வாழ்கிறார். நான்கு பேருக்குச் சொந்தமான நான்கு ஏக்கர் காணிக்கு உரிய ஆவணங்கள் இருந்தும் பௌத்த பிக்குமார் தமது அதிகாரங்களைப் பயன்படுத்தி அபகரிக்க முற்படுவதாக அவர் கூறினார்.
வெல்லாவெளி பிரதேச செயலாளரிடம் முறையிட்டும் எவ்வித பயனுமில்லை. வெல்லாவெளியில் உள்ள இலங்கைப் பொலிசாரிடம் சென்று முறையிட்ட போது, பௌத்த பிக்குமாருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்க முடியாதென்று கூறுகின்றனர்.
கெவுளியாமடுவில் காணி அபகரிப்பில் ஈடுபட்ட இந்தப் பௌத்த பிக்கு சின்னவத்தையில் இருக்கும் இன்னுமொரு பௌத்த பிக்குவுடன் சேர்ந்து, மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப் புறங்களில் உள்ள தமிழர்களது காணிகளைத் திட்டமிட்டமுறையில் அபகரித்து சிங்கள மக்களிடம் கையளித்து வருவதாக பிரதேச மக்கள் கூறுகின்றனர்.