ஆனாலும் மைத்திரி- ரணில் அரசாங்கம் உரிய கவனம் செலுத்தவில்லை என்றும் பாதிக்கப்பட்ட மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
குறித்த செயலாளர் பிரிவுகளில் உள்ள பாலையடி வட்டை 503 ஏக்கரும் கிரான்குளம் 885 ஏக்கரும், பொன்னான்வெளியில் 600 ஏக்கரும், அம்பலத்தாறு 144 ஏக்கரும், கீத்துப்பத்துவில் 96 ஏக்கரும், பாலமுனையில் 15 ஏக்கரும், அஸ்ரப்நகர் 150 ஏக்கரும் பொது மக்களின் பயிர்ச் செய்கை நிலங்களாகும்.
ஆனால், இலங்கை இராணுவம். இலங்கை வன இலாக திணைக்களம் இந்தக் காணிகளை தங்களுடைய தேவைக்குப் பயன்படுத்தவுள்ளது என்றும் இந்தக் காணிகளுக்குரிய உறுதிப்பத்திரம் தம்மிடம் இருப்பதாகவும் மக்கள் கூறுகின்றனர்.
போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான ஐநூறு வீட்டுத் திட்டங்களையும் மைத்திரி- ரணில் அரசாங்கம் தற்போது இடைநிறுத்தியுள்ளதாகவும் மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இது தொடர்பாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் டி.எம்.எல். பண்டாரநாயக்காவிடம் அம்பாறை மாவட்ட காணி உரிமைக்கான மக்கள் அமைப்பு எடுத்துக் கூறியுள்ளது.
தமது காணிகளை கையளிக்க ஏற்பாடு செய்யுமாறும் அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது. அதேவேளை, தமிழ் அரசியல் பிரதிநிதிகள் எவரும் கவனம் செலுத்தவில்லை என்று பாதிக்கப்பட்ட மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.