ஆகவே குற்றவாளிகளை இலங்கைப் பொலிஸார் காப்பாற்றுவதாக மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
கொலை செய்யப்பட்ட இளைஞனின் குடும்ப உறவினர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கூறுகின்றனர்.
எந்தவிதமான ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபடக்கூடாதென குடும்ப உறவினர்களிடம் இலங்கைப் பொலிஸார் அச்சுறுத்தி உறுதிமொழியை பெற்றுள்ளனர்.
அதனையடுத்தே கொல்லப்பட்ட இளைஞனின் சடலம், பிரதேப் பரிசோதனையின் பின்னர் இன்று வெள்ளிக்கிழமை மாலை கையளிக்கப்பட்டதாக உறவினர்கள் கூறுகின்றனர்.
கொலை செய்யப்பட்டமைக்கான ஆதாரங்கங்களும் கண் கண்ட சாட்சியங்களும் இருப்பதால் உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டும் எனவும், அரசியல் பிரதிநிதிகளிடம் மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதேவேளை, குற்றவாளிகளைக் கைது செய்து விசாரணை நடத்துவது தொடர்பாக அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் சிலர் தமக்கிடையே வாக்குவாதப்பட்டதாக ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட ஒருவர் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார்.
கொலைக் குற்றவாளிகள் எனச் சந்தேகிக்கப்படும் இருவரின் வீடுகளை ஆத்திரமடைந்த மக்கள் அடித்து நொருக்கியுள்ளனர். மூன்று முச்சக்கர வண்டிகளும் அடித்துச் சேதமாக்கப்பட்டுள்ளன.
இதனால் பிரதேசத்தில் பதற்றமும் ஏற்பட்டுள்ளது. போதைப் பொருள் வியாபாரத்துக்கு எதிரான போராட்டத்தை நடத்தி வந்த 36 வயதான தனபால் விஜேரத்னம் என்ற இளம் குடும்பஸ்த்தர் ஒருவரே நேற்று முன்தினம் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாகவும் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு மற்றும் முச்சக்கர வண்டி ஒன்றையும் கைப்பற்றியுள்ளதாகவும் இரத்தினபுரி பொலிஸார் கூறுகின்றனர்.
ஆனால், உண்மையான குற்றவாளிகள் காப்பாற்றப்பட்டுள்ளதாகவும் கொலையுடன் சம்மந்தமில்லாத இருவரையே இலங்கைப் பொலிஸார் கைது செய்துள்ளதாகவும் பிரதேச மக்கள் கூறுகின்றனர்.
நிலமையைக் கட்டுப்படுத்த இரத்தினபுரி பாமன்கார்டன் பிரதேசத்தில் பெருமளவு இலங்கைப் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
மலையகத்தில் தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களில் போதைப் பொருட்களை இலங்கைப் பொலிஸாரின் உதவியுடன் அரசியவ்வாதிகள் சிலர் விநியோகித்து வருவதாக பொது அமைப்புக்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர்.
இரத்தினபுரி மாவட்டம் இலங்கையின் சபிரகமுவா மாகாணத்தின் இரண்டு மாவட்டங்களில் ஒன்றாகும். இங்கு இந்திய வம்சாவழித் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.