மன்னார், புத்தளம், கொழும்பு ஊடாக பொத்துவில் வரையிலும் மற்றும் அம்பாந்தோட்டை முதல் நீர்கொழும்பு வரையுள்ள கடல் பகுதியில் தொழிலுக்கு செல்லவேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வடமேல், மத்திய, வடமத்திய ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் 100 மி.மீ க்கும் அதிகமான மழை பெய்யலாம் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
வடக்கு- கிழக்கு பகுதிகள் உள்ளிட்ட இலங்கையின் கரையோர பகுதிகளில் உள்ள மீனவர்களை கடலுக்கு செல்ல வேண்டாமென இலங்கை மீன்பிடித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள மழையுடன் கூடிய காலநிலை தொடர்வதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இலங்கையின் பெரும்பாலான பிரதேசங்களில் இன்று இரவு மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் எனவும் இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மலையகத்தின் பதுளை மற்றும் களுத்துறை மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.