நிருபர் திருத்தியது
ஆசிரியர் திருத்தியது
உறுதிப்படுத்தப்படக்கூடியது
ஆசிரியபீட அங்கீகாரம்
மொழி திருத்திய பதிப்பு
இலங்கை நாடாளுமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற அமர்வின் போது இடம்பெற்ற மோதலை அடுத்து ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்றம் இன்று மதியம் 1 மணிக்கு மீண்டும் கூடவுள்ளது. இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் பிரதமராக நியமிக்கப்பட்ட மகிந்த ராஜபக்சவுக்கு நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேரணை 3 ஆவது முறையாகவும் நிறைவேற்றப்பட்ட நிலையில் மகிந்த தரப்பு ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்தில் காடையர்கள் போன்று நடந்துகொண்டதுடன் மோதலில் ஈடுபட்டனர். சபாநாயகரின் ஆசனத்தை மகிந்த ஆதரவாளர்கள் கைப்பற்றியிருந்ததுடன் சபாநாயகரை நோக்கி தாக்குதலும் நடத்தப்பட்டது. இதனால் சபையின் ஓரமாக நின்று நம்பிக்கையில்லா பிரேரணை குறித்த தீர்மானத்தை சபாநாயகர் அறிவித்தார்.
எனினும் இந்த அறிவிப்பு செல்லுபடியற்றது என இலங்கை ஜனாதிபதி தெரிவித்ததுடன் இன்று சபை மீண்டும் கூடும் என அறிவிக்கப்பட்டிருந்தது.இதற்கமைய இன்று மதியம் கூடவுள்ள நாடாளுமன்ற அமர்வின்போது பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வெளிநாட்டு இராஜதந்திரிகளும் இன்றைய அமர்வுக்கு செல்வதை தவிர்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.