ஆனால் பெரும்பான்மைப் பலம் இல்லாததால் மகிந்த தரப்பு நாடாளுமன்ற அமர்வை புறக்கணித்து கௌரவமாகத் தப்பிக்கொள்வதாக ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் ஹர்ஷா டி சில்வா தெரிவித்துள்ளார்.
எனினும் இந்தப் புறக்கணிப்பு மகிந்த தரப்பக்கு அவமானம் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை மகிந்த தரப்பு நாடாளுமன்ற அமர்வை பறக்கணித்தாலும் மகிந்த தரப்பு உறுப்பினர்களான சட்டத்தரணி விஜயதாச ராஜபக்ச, அத்துரலிய ரத்தின தேரர் ஆகியோர் விசேட உரையாற்றியிருந்தனர்.
குறித்த வாக்கெடுப்பு நிறைவேற்றப்பட்ட பின்னர் நாடாளுமன்ற அமர்வை நாளை வெள்ளிக்கிழமை காலை 10.30 வரை சபாநாயகர் ஒத்திவைத்தார்.
அதேவேளை, மகிந்த ராஜபக்ச தரப்புக்கு மாறிச் சென்று கல்வி, உயர் கல்வி அமைச்சராகவும் பதவியேற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ச, நாடாளுமன்றத்தில் சர்ச்சைக்குரிய உரை ஒன்றை நிகழத்தினார்.
பெரும்பான்மையை நிருபிக்க வேண்டும் என்றும் அவ்வாறு பெரும்பான்மை உள்ள கட்சி ஒன்றுதான் அரசாங்கத்தை அமைக்க முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.
அதேவேளை, நாடாளுமன்றத்தில் எந்தத் தரப்புக்கும் ஆதரவின்றி சுயமாக இயங்கவுள்ளதாக நாடாளுமன்ற கட்டடத்தில் வைத்து செய்தியாளர்களிடம் விஜேதாச ராஜபக்ச கூறியுள்ளார்.
அத்துரலே ரத்தன தேரரும் நாடாளுமன்றத்தில் விசேட உரையாற்றிய பின்னர் எதிர்த்தரப்பு ஆசனத்தில் அமர்ந்து கொண்டார்.
இதுவரை நாளும் மகிந்த தரப்புக்கு தேரர் ஆதரவு வழங்கியிருந்த நிலையில் இன்று எதிர்த்தரப்புக்கு மாறிச் சென்றதோடு நாடாளுமன்றத்தில் சுயமாக செயற்படவுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.