இனஅழிப்பு போரின் பின்னர் அப்போது ஆட்சியிலிருந்த மகிந்த ராஜபச்ச தலைமையிலான அரசாங்கம் அபிவிருத்தி என்ற பெயரில் கண்துடைப்புக்காக பிரதான வீதிகளை மாத்திரம் செப்பனிட்டதாகவும் கிராமங்களின் உட்புற வீதிகள் இதுவரை கவனிப்பாரற்ற நிலையிலேயே காணப்படுவதாகவும் மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்தப் பகுதியில் உள்ள வீதிகளில் வீதி விளக்குகள் பொருத்தப்படாததால் இரவு நேரங்களில் வீதியால் பயணிப்போர் விபத்துக்களுக்கு முகங்கொடுக்க நேரிடுவதுடன் உயிராபத்தை எதிர்நோக்குவதாக கவலை வெளியிட்டுள்ளனர்.
உரிய தரப்பினரிடம் பல தடவைகள் கோரிக்கை விடுத்த போது பிரச்சனைக்கு தீர்வைக் காண்பது குறித்து எவ்வித சாதகமான பதிலையும் அவர்கள் வழங்கவில்லை என குற்றஞ்சாட்டியதுடன் எதிர்வரும் காலங்களில் ஏற்படப்போகும் ஆபத்துக்களைத் தடுத்து நிறுத்துவதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு வலிந்து கோரிக்கை விடுத்துள்ளனர்.