இந்த நிலையில் கொழும்பு மேல் முறையீட்டு நீதிமன்றம் இன்று இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.
இடைக்காலத் தடையுத்தரவு தொடர்பான இடையீட்டு மனுக்களைத் தாக்கல் செய்ய முடியும் என்றும் இறுதித் தீர்ப்பு எதிர்வரும் 12 ஆம் 13 ஆம் திகதிகளில் வழங்கப்படும் எனவும் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் கூறியுள்ளது.
அதேவேளை, நீதிமன்றத் தீர்ப்பையடுத்து ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் கூறியுள்ளனர்.
ஒக்ரோபர் 26 ஆம் திகதி வெள்ளிக்கிழமைக்கு முன்னர் இருந்த அரசாங்கம் மீண்டும் பதவியேற்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி கூறியுள்ளது.
எதிர்வரும் நான்காம் திகதி நாடாளுமன்றம் கூடும்போது ஒக்ரோபர் 26 ஆம் திகதிக்கு முன்னரான அரசாங்கத்திற்கு அமைவாகவே சபாநாயகர் கரு ஜயசூரிய சபையை வழிநடத்தலாம் எனவும் அது குறித்து சட்ட ஆலோசனைகளில் சபாநாயகர் ஈடுபட்டுள்ளதாகவும் உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.
ஆனால் இதுவரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இருந்தோ, மகிந்த தரப்பிடம் இருந்தோ உரிய பதில் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.