வடமாகாணத்தின்

யாழ்ப்பாணத்தில் தொடரும் அட்டகாசம் - கலட்டி பகுதியில் வீட்டின் மீது பெற்றோல் குண்டுவீச்சு - பொருட்கள் தீக்கிரை

திரைப்பட பாணியில் தொடந்து தாக்குதல் நடத்தப்படுவதாக மக்கள் விசனம்
பதிப்பு: 2018 டிச. 17 10:46
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: டிச. 17 10:52
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
யாழ்ப்பாணம் - கலட்டி பகுதியில் அடையாளந் தெரியாதோரால் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதன்போது தாக்குதல் நடத்தப்பட்ட வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும், எனினும் எவரும் சம்பவத்தில் காயமடையவில்லை எனவும் யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்தனர். நேற்றிரவு 9 மணியளவில் 2 மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளந்தெரியாத நபர்கள் குறித்த வீட்டின் மீது பெற்றோல் குண்டுகளை வீசியதுடன் வீட்டின் பிரதான கதவையும் அடித்து நொருக்கியதாக பிரதேச மக்கள் கூர்மை செய்தித் தளத்திற்கு சுட்டிக்காட்டினர்.
 
தாக்குதல் நடத்தப்பட்ட சத்தம் கேட்டு சம்பவ இடத்திற்கு வந்த அயலவர்கள் மீதும் குறித்த நபர்கள் வாள்வெட்டு நடத்த முற்பட்டதாக சம்பவத்தை நேரில் கண்டோர் குறிப்பிட்டனர்.

சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணப் பொலிஸார் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த வாரம் யாழ்ப்பாணம் - சுன்னாகம் பிரதேசத்திலும் இதேபோன்று பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதுடன், உடற்பயிற்சி நிலையம் ஒன்றும் தீக்கிரையாக்கப்பட்டிருந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.