குறிப்பாக, கிளிநொச்சியிலிருந்து பூநகரி ஊடாக யாழ்ப்பாணம் செல்லும் வீதியை இராணுவத்தினர் தமது தேவைக்காக அதிகம் பயன்படுத்துவதாக மக்கள் குறிப்பிட்டனர்.
புனரமைக்கப்பட்டுள்ள இந்த வீதியினால் அதிகளவான மக்கள் யாழ்ப்பாணத்திற்கு சென்று வருவதுடன், வாகன சாரதிகளும் இலகுவான போக்குவரத்து நடவடிக்கைக்காக இந்த வீதியைப் பயன்படுத்துகின்றனர்.
இதனால், இந்த வீதி தொடர்ச்சியாக இயங்கிக்கொண்டிருக்கின்ற நிலையில், இதே வீதியால் இல்ங்கை இராணுவத்தின் கனரக வாகனங்கள் அதி வேகத்துடன் பயணிக்கின்றமை அச்சத்தை ஏற்படுத்துவதாக பூநகரி மக்கள் சுட்டிக்காட்டினர்.
பிள்ளைகளைத் தனியாக பாடசாலைக்கு அனுப்புவதற்கு அச்சமாக உள்ளதாகவும், முதியவர்கள் உட்பட பலரும் நடந்து செல்வதற்கு கூட அச்சமடைவதாகவும் பிரதேசவாசியொருவர் குறிப்பிட்டார்.
இதேவேளை இந்த வீதியில் அண்மைக் காலங்களில் விபத்துக்கள் அதிகரித்துள்ளமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.