2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர்

வடமாகாணத்தைச் சாட்டியே மகிந்த அரசு சர்வதேசத்திடமிருந்து கடன் பெற்றது - பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு எவ்வித பலனும் இல்லை

ஐ.தே.க ஆட்சியில் பாடசாலைகளை அபிவிருத்தி செய்யப்போவதாக விஜயகலா சூளுரை
பதிப்பு: 2019 பெப். 14 15:20
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: பெப். 14 15:29
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#Srilanka
#LastWar
#MahindaRajapaksha
#Government
#VijayakalaMaheswaran
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மாகாணம் எனத் தெரிவித்து வடமாகாணத்தைக் காரணம் காட்டி சர்வதேசத்திலிருந்து நிதியுதவியைப் பெற்று இலங்கையின் ஏழு மாகாணங்களை அபிவிருத்தி செய்த இலங்கையின் முன்னைய மகிந்த ராஜபக்ச அரசாங்கம் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மாகாணங்களை இதுவரை அபிவிருத்தி செய்யவில்லை என இலங்கையின் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் குற்றம் சாட்டியுள்ளார். கடந்த நான்கு வருடங்களில் வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு கிட்டத்தட்ட ஆறாயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்ட போதும் எந்த ஒரு பாடசாலையும் பூரணமாக அபிவிருத்தி செய்யப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
தும்பளை சிவப்பிரகாச மகாவித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வன்மைப் போட்டியின் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றிய போதே விஜயகலா மகேஸ்வரன் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

எமது பிரதேசங்களில் உள்ள எந்த ஒரு பாடசாலைக்கு சென்றாலும் ஏதோ ஒரு குறையுடன் இருக்கின்றது. அக் குறைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும்.

கடந்த காலங்களில் அதிகளவான நிதி இருந்தும் அவை அபிருத்தி செய்யப்படவில்லை. வடமாகாணசபையின் ஆட்சிக் காலத்தில் ஐந்து வருடமும் திறைசேரிக்கு நிதி திரும்பிச் சென்ற வரலாறுகள் உண்டு.

தற்போது வடமாகாண சபை இல்லாததால் மாகாண பாடசாலைகளை மத்திய அரசின் கல்வி அமைச்சின் ஊடாக அபிவிருத்தி செய்து வருகின்றோம். தற்போது மூன்று மாதத்திற்கான நிதி கடந்த வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது.

அடுத்த வரவு செலவுத் திட்டத்தில் வடக்கு, கிழக்கு, மலையகத்திற்கென நிதியைக் கேட்டிருக்கிறோம். கடந்த நான்கு வருடங்களில் வடக்கு மாகாண பாடசாலைகளிற்கு கிட்டத்தட்ட ஆறாயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது. ஆனால் எந்த ஒரு பாடசாலையும் பூரணமாக அபிவிருத்தி செய்யப்படவில்லை. ஆனால் நகர் பாடசாலைகளிற்கு சென்றால் அனைத்து வசதிகளும் உண்டு.

கிராமப்புற பாடசாலைகளில் கல்வி கற்று ஐந்தாம் தர புலமைப் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியெய்தி நகர் பாடசாலைகளிற்கு சென்று அப்பாடசாலைகளிற்கே பெருமை தேடிக் கொள்கிறார்கள். இதனால் கிராமப் புற பாடசாலைகள் புறந்தள்ளப்படுகின்றது. இது தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

கடந்த காலங்களில் அபிவிருத்தி என்ற போர்வையில் இங்கு எதுவுமே நடக்கவில்லை. மாகாண சபை, பிரதேச சபைகளிற்கு உட்பட்ட வீதிகள் புனரமைக்கப்படவில்லை. ஆனால் வந்த நிதி திரும்பிச் சென்றிருக்கின்றது. ஆனால் இந்த ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியிலே கம்பரெலிய திட்டத்தில் ஒவ்வொரு தொகுதிக்கும் 300 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் பிரதேச சபைகள் ஆட்சி மாறி மாறி தங்களது வாக்கு வங்கிகளைத் தக்கவைத்ததே தவிர அபிவிருத்தி செய்யவில்லை.

இதனாலே ஒவ்வொரு தொகுதிக்கும் 300 மில்லியன் ஒதுக்கீடு செய்து அந்த தொகுதிக்கே பயன்படுத்த வேண்டும் என சொல்லப்பட்டுள்ளது என்றார். கம்பரெலிய திட்டத்திலும், விசேட நிதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு வழங்கப்பட்டுள்ளது. அவர்களிடம் பேசும் போதும் கூடுதலான நிதிகளை பெற்றுக் கொள்ள முடியும். எமது கல்வி அமைச்சின் மூலமாகவும் நிதிகளைகக் கொண்டுவருவேன்.

மேலும் தொகுதி ரீதியாக ஒவ்வொரு பாடசாலைகளை கட்டாயம் தேசிய பாடசாலையாக உள்வாங்க வேண்டும் என்றார்.