ஆனால் ஆனால் புதிய சட்டமூலம் தேவையில்லை என்றும் தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குமாறு வலியுறுத்தியும் மாணவர்கள் பேரணியில் ஈடுபட்டனர்.
மைத்திரி, ரணில் ஆகியோரை விமர்சிக்கும் சுலோக அட்டைகளை கைகளில் ஏந்தியவாறும் மாணவர்கள் பேரணியில் ஈடுபட்டனர். இதனால் நாடாளுமன்றத்திற்குச் செல்லும் வீதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
நாடாளுமன்றத்தில் வரவு செலவுத் திட்ட விவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதனால் நாடாளுமன்ற வளாகத்தில் மேலதிக பொலிஸரும் விசேட அதிரடிப்படையினரும் கூடுதல் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
இலங்கையின் அரசியல் யாப்பில் பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்ந்தும் அமூலில் உள்ளது. போருக்குப முன்னரும் 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலிலும் இந்தப் பயங்கரவாதத் தடைச் சட்டம் நடைமுறையில் உள்ளது.
இந்தச் சட்டத்தின் கீழ் தமிழ் இளைஞர், யுவதிகள் பலர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். கொழும்பில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடும் பல்கலைக்கழக மாணவர்கள் பலரும் ஆர்ப்பாட்டங்களின்போது இந்தச் சட்டத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டிருந்தனர்.
அதேவேளை, ஜெனீவா மனித உரிமைச் சபையும் இந்தச் சட்டமூலத்தை நீக்குமாறு வலியுறுத்தி வருகின்றது.